BGM Shortfilms 2019

‘முன்னாடியே அப்படி பண்ணியும்’.. நம்பி விட்ட குழந்தைகளை.. ‘தாய் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநெல்வேலியில் தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘முன்னாடியே அப்படி பண்ணியும்’.. நம்பி விட்ட குழந்தைகளை.. ‘தாய் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..’

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே வசித்து வரும் மைக்கேல் என்பவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சக்தி அனுசுயா (5) என்ற மகளும், துரைசிங் (4) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென மாரியம்மாள் தலையணையை குழந்தைகளின் முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் சக்தி அனுசுயா சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைசிங் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே 2 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாகக் கருதி மாரியம்மாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து 3 பேரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் ஏற்கெனவே மாரியம்மாள் தனது ஒரு வயது பெண் குழந்தை ஒன்றுக்கு எறும்புப் பொடி கலந்த உணவை ஊட்டியதும், அதனால் அந்தக் குழந்தை இறந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் மாரியம்மாளுக்கு மனநிலை சரியில்லாமல் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனநிலை பாதித்ததால் இந்தக் கொலைகளை அவர் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

TIRUNELVELI, MOTHER, DAUGHTER, SON, BRUTAL, MURDER, MENTALLY, DISTURBED