‘லவ் மேரேஜ்தான் பண்ணோம்.. ஆனா இன்னொருத்தி கூட போய்ட்டாரு’.. ‘யாரா இருந்தாலும் அவர நல்லா பாத்துக்கணும்!’.. ‘நெகிழவைத்த டிக்டாக் பெண்’.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை உயிருக்குயிராய் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் கணவர், தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதாக டிக்டாக்கில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் தாலியும், பொட்டும் சகிதமாக கூறும் பெண் ஒருவர் வைரலாகி வருகிறார்.

‘லவ் மேரேஜ்தான் பண்ணோம்.. ஆனா இன்னொருத்தி கூட போய்ட்டாரு’.. ‘யாரா இருந்தாலும் அவர நல்லா பாத்துக்கணும்!’.. ‘நெகிழவைத்த டிக்டாக் பெண்’.. வீடியோ!

இதுபற்றி அப்பேட்டியில் பேசிய அப்பெண்,  ‘இப்பதான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி முடிச்சேன். ஆனா அதுக்குள்ள என்ன திடீர்னு வேணாம்னு சொல்லிட்ட அந்த மனுஷன் வேற ஒரு பொண்ணோட போயிட்டாரு. நல்லா இருந்தா சரிதான். நான் மனசார லவ் பண்ணிட்டேன். அதனால அவர் யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கணும்னு சொல்லி விலகிட்டேன். யாரா இருந்தா என்ன.. அவர நல்லா பாத்துக்கிட்டா போதும்’ என்று நெஞ்சை நெகிழவைத்த அவரது பேச்சுக்கு பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

பூவே உனக்காக படத்தில் விஜய் பேசுவது போல், ‘இதுவும் இன்னொரு விதமான காதல் போல’ என்று பலரும் இந்த பெண்ணுக்காக உருகி உருகி கமெண்ட் போட, இந்த பெண்ணோ இந்த சோகங்களை மறந்தபடி, அடுத்தடுத்து டிக்டாக் வீடியோக்களை வெளியிடுவதால், மீண்டும் ரசிகர்கள்,   ‘2 நாள் ஃபீல் பண்ணதெல்லாம் வேஸ்ட்டா போச்சே?’,  ‘என்ன சிம்ரன்.. நீயா இப்படி?’ என்பன போன்ற

கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

TIKTOK, WOMAN