உருட்டுக்கட்டையை எடுத்து... தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உருட்டுக்கட்டையை எடுத்து... தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

சேர்ந்தமரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி வியாகம்மாள் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சீமராயப்பன் என்பவருக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நீடித்து வந்த நிலையில், நேற்று இரவு வியாகம்மாள் தண்ணீர் பிடிக்கும் போது சீமராயப்பன் அங்கு சென்று உருட்டுக்கட்டையால் அவரை சராமரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தோணி வியாகம்மாள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சீமராயப்பனை தேடி வருகின்றனர்.

WATERCRISIS