"ஆக்சிடன்ட் மாதிரியே இருக்கணும்".. திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் அருகே திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவரை, காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஆக்சிடன்ட் மாதிரியே இருக்கணும்".. திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.!

Also Read | பூமியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது சொத்தில் பங்கு.. உலக கோடீஸ்வரர்களையே திகைக்க வைத்த வாரன் பஃபெட்..!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம்  கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். 45 வயதான இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்திருக்கிறார். அங்கே, மலையரசன் என்னும் 22 வயதான இளைஞர் சிறுவயது முதலே பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனிடையே மலையரசனுக்கும் முத்துராமலிங்கத்தின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையறிந்த முத்துராமலிங்கம் இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது.

விபத்து

இந்நிலையில், முத்துராமலிங்கத்திற்கு கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து. இதனையடுத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் அவர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார் முத்துராமலிங்கம். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் திருச்சுழி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

புகார்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர், முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முத்துராமலிங்கத்தின் பெரியப்பா மகன் முருகன் என்பவர் தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நாய், நேராக முத்துராமலிங்கத்தின் வீட்டுக்கு சென்றுள்ளது.

Woman and her lover arrested for attacking her husband

விசாரணை

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் முத்துராமலிங்கத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மலையரசனுடன் சேர்ந்து அந்த பெண் தனது கணவரை கொலை செய்ய போனில் திட்டமிட்டது தெரியவந்திருக்கிறது. அதன்படி, மலையரசன் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் சேர்ந்து முத்துராமலிங்கத்தை கொலை செய்து அதனை திட்டப்படி விபத்து போல சித்தரித்தது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து முத்துராமலிங்கத்தின் மனைவி, மலையரசன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். திருமணத்தை மீறிய உறவை கண்டித்ததால் மனைவியே காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | நண்பரின் வீட்டுக்குள் ஒருவாரமாக பதுங்கியிருந்த மனைவி.. கிராமத்தினருடன் சென்று கதவை தட்டிய கணவன்... பதறிப்போன அதிகாரிகள்..!

WOMAN, LOVER, ARREST, ATTACK, HUSBAND

மற்ற செய்திகள்