Bharathi Kannamma: ‘டிஎன்ஏ மாற்றம்’, ‘கண்ணம்மா மீது கொலை முயற்சி’.. கிழிந்தது வெண்பாவின் முகத்திரை.. அடுத்தடுத்து எண்ட்ரி கொடுத்த சாட்சியங்கள்.. பரபரப்பில் பாரதி கண்ணம்மா...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், நாயகன் பாரதி டி.என்.ஏ டெஸ்ட்டை எடுத்திருந்த நிலையில், ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் பாரதியின் குழந்தைகள் தான் என்பதும் உறுதியானது. பாரதியின் நீண்ட நாள் சந்தேகங்கள் தீர்ந்த நிலையில், மறுபுறம் தனது அப்பா யாரென தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருந்தார் ஹேமா. அப்போது அவரிடம் நான் தான் உன் அப்பா என பாரதி கூறவும் செய்கிறார்.

Bharathi Kannamma: ‘டிஎன்ஏ மாற்றம்’, ‘கண்ணம்மா மீது கொலை முயற்சி’.. கிழிந்தது வெண்பாவின் முகத்திரை.. அடுத்தடுத்து எண்ட்ரி கொடுத்த சாட்சியங்கள்.. பரபரப்பில் பாரதி கண்ணம்மா...!

Also Read | VIDEO: "அந்த சிகிச்சை செலவு ₹ 5 கோடி".. வாழ்நாளை எண்ணும் மகளுக்காக மன்றாடும் சென்னை பெற்றோர்..! உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்..

பின்னர் அனைவர் முன்னிலையிலும் கண்ணம்மாவிடம் பாரதி மன்னிப்பு கேட்கிறார். விட்டால் இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் என இதை கண்டதும் கொதித்து போகும் வெண்பா, "இந்த ரிசல்ட் உண்மையா இருக்குறதுக்கு வாய்ப்பே இல்ல பாரதி. இது Fake. உன்ன யாரோ ஏமாத்தி இருக்காங்க. 2 தடவ Fertility Test எடுத்தே. ரெண்டு தடவையும் என்ன ரிசல்ட் வந்துச்சு. இந்த ஜென்மத்துலயே உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதுன்னு. அப்புறம் எப்படி இந்த குழந்தைங்களோட DNA மேட்ச் ஆகும்?" என வெண்பா ஆவேசத்துடன் கூறினார்.

Witness revealed venba swapped DNA Result bharathi kannamma

அங்கிருந்த அனைவரும் இதனைக் கேட்டு அதிர்ச்சி ஆக, பாரதியை நோக்கி கேள்வி கேட்கும் கண்ணம்மா, "என்ன சார் திருதிருன்னு முழிக்குறீங்க?. வெண்பா கேக்குற கேள்வி நியாயமா தானே இருக்கு. பதில் சொல்லுங்க சார்" என்கிறார். இதனைக் கேட்டதும் என்ன சொல்வதென தெரியாமல் முழித்துக் கொண்டே நிற்கிறார் பாரதி. ஆனால் அனைவரும் கிளம்புங்கள் பிரச்சனை எல்லாம் முடிந்தது என கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா, பாரதியையும் கண்ணம்மாவை அழைத்துச் செல்ல முற்படுகிறார்.

Witness revealed venba swapped DNA Result bharathi kannamma

அப்போது அவரை தடுத்துவிட்டு, மீண்டும் தொடரும் கண்ணம்மா, “வெண்பா கேட்பது ஒரு லாஜிக்கான கேள்வி. குழந்தை பாக்கியமே இல்லாத பாரதி எப்படி இரண்டு குழந்தைகளின் டி.என்.ஏ-வுடன் மேட்ச் ஆக முடியும் என்கிற கேள்விக்கு பாரதி பதில் சொல்லட்டும் அப்புறம் கிளம்பலாம்.” என்று சொல்கிறார். அப்போது பாரதியோ, வெண்பாவிடம் நேருக்கு நேராக பார்த்து என்னிடம் டிஎன்ஏ ரிசல்ட் இருக்கிறது. நான் எடுத்து பார்த்தேன். நீ சொல்லும் லாஜிக் எல்லாம் நான் நம்பவில்லை. அதற்கு என்னிடம் பதிலும் இல்லை” என்று சொல்லிவிடுகிறார்.

Witness revealed venba swapped DNA Result bharathi kannamma

அப்போது சிரிக்கும் வெண்பா, “இல்லை இதற்கு இங்கு இருக்கும் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். சின்ன குழந்தை கூட பதில் சொல்லும். மருத்துவர்கள், வார்டு பாய் என யார் வேண்டுமானாலும் பதில் சொல்லுங்கள் என்று கேட்கிறார். அப்போது ஒரு கேரக்டர் என்ட்ரி கொடுக்கிறார். அவர்தான் பாரதியின் மருத்துவமனையில் 10 வருடம் முன்பு வேலை செய்த கம்பவுண்டர். அவர் தற்போது இந்த பிரச்சனை எல்லாம் நடக்கும் இந்த மருத்துவமனையில் பாரதியால் அனுமதிக்கப்பட்டு இலவச சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வந்தவர் 10 வருடம் முன்பு வெண்பா தனக்கு பத்தாயிரம் கொடுத்து ஒரு பலவீனமான டிஎன்ஏ சாம்பிளை மாற்றி வைத்து அந்த ரிசல்ட்டையே பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட்டாக மாற்றிக் கொடுக்க வைத்ததாக உண்மையை சொல்கிறார். மேலும் இந்த வெண்பா நல்லவளே இல்லை என்கிறார்.

Witness revealed venba swapped DNA Result bharathi kannamma

அப்போதும் வெண்பா, அவர் சொல்லுவது பொய் என மறுத்து அவரை யாரோ செட்டப் பண்ணி இப்படி சொல்ல வைக்கிறார்கள் என்று சொல்ல, அப்போது இன்னொரு கேரக்டர் எண்ட்ரி கொடுக்கிறது, அது வேறு யாரும் அல்ல, கண்ணம்மாவை கொலை செய்வதற்கு வெண்பாவால் நியமிக்கப்பட்ட கூலிப்படை தலைவர் துர்கா தான், முன்பாக இந்த கேரக்டர் மிகவும் பிரபலமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக காணாமல் போன இந்த கேரக்டர் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருக்கிறது.  ஆம் ஒற்றைக் காலுடன், கைப்பிடியின் உதவியுடன் வந்த துர்கா எல்லா உண்மையையும் அனைவர் முன்னிலையிலும் சொல்வதுடன், “கண்ணம்மாவை கொலை செய்ய பாரதி தான் வெண்பாவை நாடியதாக வெண்பா என்னிடம் கூறினார்.  அதனை நான் முதலில் நம்பினேன், பிறகு உண்மையை அறிந்துகொண்டேன்.” என கூறும் துர்கா பின்னர் வெண்பாவின் தனிப்பட்ட பழிவாங்கல் உணர்ச்சிதான் அவர் கண்ணம்மாவை கொல்ல முயல்வதற்கு காரணம் என உணர்ந்து கொண்டு வெண்பாவிடமிருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பொறுப்பையே தான் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

Witness revealed venba swapped DNA Result bharathi kannamma

மேலும் வெண்பா தன் சித்தப்பாவை கொன்றது, கண்ணம்மா பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவருக்கு விஷ ஊசி போட்டு கொல்ல பார்த்தது என அனைத்தையும் சொல்கிறார். கண்ணம்மாவின் பிரசவத்தின்போது விஷ ஊசி போட வந்த வெண்பாவை தானே தடுத்து வெளியே அழைத்துச் சென்றதாகவும் துர்கா குறிப்பிடுகிறார். இப்படி அடுத்தடுத்த சாட்சியங்களால் வெண்பா, மொத்த குடும்பத்திடமும் வசமாக சிக்கிக்கொண்டார். அத்துடன் இத்தனை வருடமாக கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் பிரிந்து வாழ்ந்ததற்கு வெண்பா செய்த சூழ்ச்சிகளே காரணம், அதற்காக எந்த எல்லைக்கும் வெண்பா சென்றுள்ளார் உள்ளிட்ட விஷயங்கள் என அனைத்துமே அனைவருக்கும் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இனி நடக்கப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read | Bharathi Kannamma: மன்னிப்பு கேட்டு கதறிய பாரதி..! ‘கான்ஃபிடண்ட்டே இல்லயே?’ கலாய்ச்சுவிடும் கண்ணம்மா.. வெண்பா எடுத்துக்கொடுத்த புது லாஜிக்..!

BHARATHI KANNAMMA TODAY EPISODE, BHARATHI KANNAMMA PROMO, VIJAY TV, TV SERIAL UPDATE, BHARATHI KANNAMMA NEW PROMO

மற்ற செய்திகள்