2 நாளா அப்பா போனை எடுக்கல.. போலீஸுடன் வீட்டுக்கு வந்த மகள்..கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இரண்டு நாட்களாக இறந்துப்போன கணவரின் உடலுடன் மனைவி வசித்துவந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2 நாளா அப்பா போனை எடுக்கல.. போலீஸுடன் வீட்டுக்கு வந்த மகள்..கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Also Read | தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திராவை வரைந்த இளைஞர்.. வைரல் கேப்ஷனுடன் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள வைக்கோல்காரன் தெருவை சேர்ந்தவர் அசோக் பாபு. 53 வயதான அஷோக்கிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அசோக் பாபுவின் மகன் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார். திருமணம் ஆன இவரது மகள் பெங்களூருவில் தனது கணவருடன் வசிக்கிறார். இவர் அவ்வப்போது தனது தந்தை அசோக் பாபுவிற்கு போன் செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது தந்தைக்கு போன் செய்திருக்கிறார் அவர். ஆனால், அசோக் போனை எடுக்கவில்லை.

Wife stayed 2 days with Husband Body in Chennai

பூட்டப்பட்ட கதவு

ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்த அவர், இரண்டு நாட்களாக அசோக் போனை எடுக்காததால் அச்சமடைந்திருக்கிறார். இதனை அடுத்து உடனடியாக சென்னைக்கு புறப்பட்டுவந்த அவர், வேப்பேரி காவல்துறை அதிகாரிகளிடம் விபரத்தை கூறி, அவர்களுடன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் கதவை தட்டியும் எந்த பயனும் இல்லாததால் கதவை உடைக்க திட்டமிட்டனர்.

இதனையடுத்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண்மணி அதிர்ச்சியில் உறைந்துபோயினர். வீட்டினுள்ளே இறந்த நிலையில், அசோக் பாபு தரையில் கிடந்திருக்கிறார். மனநலம் குன்றிய அவரது மனைவி அசோக்கின் உடலை பார்த்தபடி அமர்ந்திருந்திருக்கிறார்.

விசாரணை

இதனையடுத்து அசோக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர் அவரது மனைவியை மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.  அசோக்கின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் காவல்துறை அதிகாரிகள், அவரது மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக கூறியுள்ளனர்.

Wife stayed 2 days with Husband Body in Chennai

சென்னையில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் இறந்து போன கணவரின் உடலுடன் மனைவி இரண்டு நாட்களாக வசித்துவந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | இதுவரைக்கும் 600 பேர் Missing.. உள்ள போனா திரும்ப வர்றது ரொம்ப கஷ்டம்.. இந்தியாவுல இப்படி ஓரு காடா?

Nenjuku Needhi Home
CHENNAI, WIFE, HUSBAND

மற்ற செய்திகள்