Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

வரதட்சணை விவகாரம்.. வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயிலாடுதுறை அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், கணவரது வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து அவர் உள்ளே சென்றது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வரதட்சணை விவகாரம்.. வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி..!

Also Read | அட.. இவ்வளவு பக்கத்துலயே இருந்திருக்கு.. மனிதர்கள் வசிக்க உகந்த கிரங்கங்களின் தேடல்.. புதிய அத்தியாயத்தை எழுத துவங்கும் ஆராய்ச்சியாளர்கள்..!

திருமணம்

திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு பிரவீனா வீட்டினர் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடராஜன் - பிரவீனா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மாமனார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தன்னை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கியதாகவும் இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார். மேலும், தான் வீடு திரும்பும் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கும் பிரவீனா, அங்கிருந்த கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். இதனால் அந்த கிராமமே பரபரப்புடன் காணப்பட்டது.

Wife lodged a complaint against husband parents in Tiruvarur

போராட்டம்

மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"திருமணமாகி நான் இந்த வீட்டில் தான் வசித்துவந்தேன். சமீபத்தில் எனது மாமனார் மற்றும் அவரது சகோதரர் எனக்கு என்னுடைய பெற்றோர் வழங்கிய நகைகள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், என்னை தாக்கி வெளியேற்றினர். நான் எனது பெற்றோரிடம் இதனை தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். இந்நிலையில் கணவர் வீட்டுக்கு நான் வருவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்" என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் நடராஜன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி போராடிய மனைவி, கணவர் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான ரகசிய தீவில் இருக்கும் சொகுசு வீடு.. கடலுக்கு நடுவுல இவ்வளவு வசதிகளா.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!

WIFE, COMPLAINT, HUSBAND, PARENTS, TIRUVARUR, வரதட்சணை விவகாரம்

மற்ற செய்திகள்