எப்போ பார்த்தாலும் 'டார்ச்சர்' தான்... கடைசியா எவ்ளோ 'சொல்லி'யும் கேட்கல.. கணவரை கொலை செய்தது ஏன்?... ஆசிரியை அதிர்ச்சி வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவரை கொலை செய்தது குறித்து ஆசிரியை அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

எப்போ பார்த்தாலும் 'டார்ச்சர்' தான்... கடைசியா எவ்ளோ 'சொல்லி'யும் கேட்கல.. கணவரை கொலை செய்தது ஏன்?... ஆசிரியை அதிர்ச்சி வாக்குமூலம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(34). என்ஜினியரான இவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய  மனைவி அருட்செல்வம்(32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

சம்பவ தினத்தன்று தூங்கச்சென்ற சுந்தர் காலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மர்ம உறுப்பிலும், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததும் தெரிய வந்தது. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரது மனைவியிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கொலை செய்ததை அவரது அருட்செல்வம் ஒப்புக் கொண்டார்.

சுந்தர் மது போதையில் வந்து ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், சம்பவத்தன்றும் மகள் முன்பு உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகவும், அதனால் வெறுப்படைந்து கணவரை கொன்று விட முடிவு செய்ததாக ஆசிரியை அருட்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக தன்னுடைய சித்தி பாலாமணி, அவரது மகன் சுதேர் ஆகியோரை வரவழைத்து கணவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். போலீசார் தற்போது அருட்செல்வம், பாலாமணி, சுதேர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்