‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.‌. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.‌. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!

தச்சு தொழிலாளி

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர் ஜீவா (வயது 29). தச்சு தொழிலாளியான இவருக்கு கவிதா (வயது 25) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது.

மர்மமாக இறந்த கணவன்

இந்த சூழலில் கடந்த 16-ம் தேதி ஜீவா அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து மனைவி கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதுபோதையில் இருந்த தனது கணவர் கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாக போலீசாரிடம் கவிதா தெரிவித்துள்ளார்.

Wife affair with husband friend, Shocking confession released

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

இதனை அடுத்து ஜீவாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஜீவாவின் பிரேத பரிசோதனை குறித்த அறிக்கையை மருத்துவர்கள் போலீசாரிடம் கொடுத்தனர். அதில் ஜீவாவின் முகம், வாய் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

Wife affair with husband friend, Shocking confession released

விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டர். அப்போது கவிதா மற்றும் ஜீவாவின் நண்பர் ராஜா (வயது 39) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டர். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பவே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஜீவாவை கொலை செய்ததாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Wife affair with husband friend, Shocking confession released

பரபரப்பு வாக்குமூலம்

இதுகுறித்து போலீசாரிடம் கவிதாவும், ராஜாவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், ராஜாவின் சொந்த ஊர் கொண்டலாம்பட்டியை அடுத்த பூலாவரி. சரக்கு ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு பூலாவரியில் வசித்து வந்த ஜீவாவின் அக்கா கணவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்வுக்கு சென்றபோதுதான் ஜீவாவுக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கணவரின் நண்பருடன் பழக்கம்

இதனை அடுத்து ராஜா அடிக்கடி ஜீவா வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ராஜாவுக்கு, கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜீவா வீட்டில் இல்லாத சமயம் கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ராஜா தனது கள்ளக்காதலை வளர்ப்பதற்காக சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு தனியாக வசித்து வந்துள்ளார்.

Wife affair with husband friend, Shocking confession released

கள்ளக்காதல் விவகாரம்

அந்த வீட்டுக்கு கவிதாவை அடிக்கடி அழைத்துச் சென்று ராஜா உல்லாசமாக இருந்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராஜா, தனது கள்ளக்காதலி கவிதா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் போட்டோ ஒன்றையும் எடுத்து அந்த வாடகை வீட்டில் மாட்டி வைத்திருந்துள்ளார். இதனிடையே இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததும் ராஜாவின் மனைவி, அவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

Wife affair with husband friend, Shocking confession released

மதுபோதையில் வந்த கணவன்

இதனை அடுத்து இந்த கள்ளக்காதல் குறித்து ஜீவாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனைவி கவிதாவை ராஜாவை கண்டித்தார். இதனிடையே கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் ஜீவா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா, இருவரையும் கண்டித்துள்ளார்.

Wife affair with husband friend, Shocking confession released

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவன் கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜீவாவின் வாய், மூக்கை துணியால் அமுக்கி, மற்றொரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி ஜீவா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மதுபோதையில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அடுத்து கவிதா மற்றும் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CRIME, SALEM, WIFE, AFFAIR

மற்ற செய்திகள்