நடுரோட்டில் கல்யாணநாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடிய தம்பதி.. தட்டிக்கேட்ட ‘புதுமாப்பிள்ளைக்கு’ நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் நடுரோட்டில் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்களை தட்டி கேட்ட புதுமாப்பிள்ளையை கொலை செய்த வழக்கில் தம்பதியினர் உட்பட 5 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

நடுரோட்டில் கல்யாணநாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடிய தம்பதி.. தட்டிக்கேட்ட ‘புதுமாப்பிள்ளைக்கு’ நேர்ந்த கொடூரம்..!

புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ் (எ) மணிகண்டன் (வயது 28), ஏசி மெக்கானிக்கானிக்கான சதீஷுக்கு மதிவதனா என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷின் எதிர்வீட்டை சேர்ந்த சங்கர் (வயது 35), அவரது மனைவி ரமணி (வயது 28) ஆகியோர் திருமண நாளையொட்டி தெருவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Wedding day celebration in middle of the street condemned youth murder

அப்போது ரமணியின் தம்பி ராஜா (வயது 26) மற்றும் அவரது நண்பர்களான தென்னல் பகுதியைச் சேர்ந்த அசார் (வயது 23), வில்லியனூர் கணுவாபேட் புதுநகர் தமிழ்செல்வன் (வயது 23) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் தட்டிக்கேட்டுள்ளனர்.

Wedding day celebration in middle of the street condemned youth murder

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து சதீஷின் வீட்டுக்கு சென்ற ராஜா, அவரின் மாமா சங்கர், அசார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சதீஷை கத்தியால் தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியதியுள்ளனர். இதில் படுகாயமடைந்து சதீஷை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Wedding day celebration in middle of the street condemned youth murder

இதுகுறித்து சதீஷின் தந்தை வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சங்கர்-ரமணி தம்பதியினர் உட்பட 5 பேர் மீது  வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை தேடி வந்த நிலையில் அசார், தமிழ்செல்வன் ஆகியோரை தென்னல் பகுதியிலும் ராஜா, சங்கர் அவரது மனைவி ரமணி ஆகியோரை வில்லியனூர் அம்மா நகரிலும் போலீசார் கைது செய்தனர்.

Wedding day celebration in middle of the street condemned youth murder

மேலும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MURDER, CRIME, PUDUCHERRY, WEDDINGDAY

மற்ற செய்திகள்