VIDEO: திருப்பூர் செங்கல் சூளையில் திடீர் ‘சுழல்காற்று’.. அலறியடித்து வீட்டுக்குள் ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடுமலை அருகே செங்கல் சூளையில் மினி சுழல்காற்று ஏற்றப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

VIDEO: திருப்பூர் செங்கல் சூளையில் திடீர் ‘சுழல்காற்று’.. அலறியடித்து வீட்டுக்குள் ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் பல செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசாக மழை பெய்தது. இதில் உடுமலை மடத்துக்குளம் பகுதியில் மழை வருவதற்கு முன்பாக காற்று பலமாக வீசியது. அப்போது சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சூளையில் தொழிலாளர்கள் வழக்கம்போல செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

திடீரென பலத்தக் காற்றுடன் சுழல்காற்று உருவாகி மேகத்துக்கும் தரைக்குமாக சுழன்றது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். இதனை அங்கிருந்த தொழிலாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

VORTEX, TIRUPPUR, VIRAL