Darbar USA

“சும்மா ஓயாம தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தா?”.. “பட்டப் பகலில் கள்ளக்காதலன் செய்த பதைபதைப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் முருகன் (39). நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கும், தென்காசி மாவட்டம் இலஞ்சியைச் சேர்ந்த ராமலட்சுமி (35) என்பவருக்கும்  திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில், இத்தம்பதியருக்கு 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

“சும்மா ஓயாம தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தா?”.. “பட்டப் பகலில் கள்ளக்காதலன் செய்த பதைபதைப்பு சம்பவம்!

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர்தான், இவர்கள் குடும்பத்தோடு ராஜபாளையத்துக்கு குடியேறினர். குழந்தைகள் ராஜபாளையம் பள்ளியில் படித்துவரும் நிலையில், மனைவி, குழந்தைகளை ராஜபாளையத்திலேயே விட்டுவிட்டு, கோவையில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் முருகன் பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே, ராஜபாளையத்தில் இருந்த ராமலட்சுமிக்கும், அவரது உறவினரான முகில்வண்ணம் பிள்ளைத்தெருவைச் சேர்ந்த சண்முகத்துக்கும்(40) இடையே தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் 3 மணி அளவில், ராமலட்சுமியின் வீட்டுக்கு எதிரே வந்து நின்று பேசிக்கொண்டிருந்த சண்முகம், திடீரென ராமலட்சுமியின் வாயைப்பொத்தி கழுத்தறுத்துக் கொன்று வீசினார். 

அதன் பின்னர் போலீஸில் சரணடைந்த  சண்முகம், ராமலட்சுமி தன்னை ஓயாமல் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரிடம் நேரில் சென்று பேசப்போனதாகவும், ஆனால் வாய்த் தகராறு முற்றியதால், எடுத்துப் போயிருந்த கத்தியக் கொண்டு, ராமலட்சுமியின் கழுத்தறுத்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

VIRUDHUNAGAR