'வீட்டுக்கு வெளிய பைக் உடையுற சத்தம்...' 'என்ன ஏதுன்னு கதவை ஓப்பன் பண்ணா...' - ஒரே மாதிரி நடந்த 2 சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டை அடுத்த ஜானகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் வீட்டில் 2 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

'வீட்டுக்கு வெளிய பைக் உடையுற சத்தம்...' 'என்ன ஏதுன்னு கதவை ஓப்பன் பண்ணா...' - ஒரே மாதிரி நடந்த 2 சம்பவம்...!

அப்போது வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. பதறிப்போய் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பச்சையப்பன் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வெளியே வந்து பார்த்தபோது, பச்சையப்பன் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடர்கள் பறிக்க முயன்றனர்.

உடனே பச்சையப்பனும் அவரது மகனும் திருடர்களை நகையை பறிக்க விடாமல் தடுத்து போராடியுள்ளனர். அவர்கள் இருவரையும் திருடர்கள் சேர்ந்து தாக்க, அவர்கள் சத்தம் போட்டு அலறியுள்ளனர்.

சத்தம் கேட்டு அருகாமையில் வசிக்கும் மக்கள் ஓடி வருவதை பார்த்த திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்கள், திருடர்களை துரத்திச்சென்று அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளனர்.

போலீசாருக்கு தகவல் கொடுத்தபின், அவர்கள் வருவதற்குமுன் மீண்டும் திருடர்கள் தப்பிச் சென்றனர்.

இதேபோல் திண்டிவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சபரிவாசன் என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சபரிவாசன், திருடர்களை பிடிக்க துரத்தி சென்றுள்ளார்.  கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள நகைக்கடை உட்பட பல்வேறு வீடுகளில் கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பச்சையப்பன், மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தீவிரமாக  தேடிவருகின்றனர். அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள் கூட்டமாகச் சென்று கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்