'ச்சே, பப்ளிக் இருக்கும் போதே இந்த வேல பாக்குறியா'?... 'செருப்பால் லெப்ட், ரைட் வாங்கிய பெண்'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை, பெண் ஒருவர் செருப்பால் அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ச்சே, பப்ளிக் இருக்கும் போதே இந்த வேல பாக்குறியா'?... 'செருப்பால் லெப்ட், ரைட் வாங்கிய பெண்'... பரபரப்பு சம்பவம்!

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும். அந்த வகையில் பிரசவ வார்டுக்கு அருகே உள்ள இடத்தில் பலரும் அமர்ந்திருந்தார்கள். அந்த பகுதியில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு அமர்ந்திருந்த 40 வயது பெண்ணிடம் அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரைப் பிடித்துச் செருப்பால் அடித்தார். இது மட்டுமன்றி அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தார்.

இதையடுத்து காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்