‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தடுமாறி லாரிக்கு அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...

வேலூர் மாவட்டம் கோரப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்துவந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் கிளம்பி கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென எதிரே லாரி ஒன்று வருவதைக் கவனித்த அவர் வாகனத்தின் வேகத்தை குறைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் வாகனத்தின் டேங்க் மீது அவர் வைத்திருந்த பை ஒன்று ஹேண்டிலில் மாட்டிக்கொண்டுள்ளது. இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் தடுமாறி விழுந்த அவர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT, COLLEGESTUDENT, CCTV, ENGINEERING, STUDENT, LORRY, BIKE