கொரோனாவுக்கு 'தமிழகத்தில்' முதன்முறையாக... 'முப்பது' வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'உயிரிழப்பு'... 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாக இது பதிவாகியுள்ளது.

கொரோனாவுக்கு 'தமிழகத்தில்' முதன்முறையாக... 'முப்பது' வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'உயிரிழப்பு'... 'அதிர்ச்சி' தகவல்!

இன்று ஒரே நாளில் மட்டும் இந்த வைரசிற்கு 12 பேர் பலியாகினர். இந்நிலையில், இன்று உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவார். தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றிற்கு 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமியும், வேலூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் பலியாகியுள்ளனர்.

ஒருபக்கம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், முப்பது வயதுக்கு கீழ் ஏற்பட்ட இந்த மரணம் மக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது.

மற்ற செய்திகள்