My India Party

"நீ திரும்ப போராடி இருக்கணும், சித்ரா..." திடீர் அதிர்ச்சியால் மனமுடைந்த சின்னத்திரை 'நடிகர்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"நீ திரும்ப போராடி இருக்கணும், சித்ரா..." திடீர் அதிர்ச்சியால் மனமுடைந்த சின்னத்திரை 'நடிகர்'!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, விஜய் டிவி சீரியலான சரவணன் மீனாட்சி இரண்டாம் சீசனில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் அவரை மக்களிடையே மிகவும் பிரபலமாக்கியது.tv serial actor kumaran shocked about chitra death

இந்த தொடரால் சித்ரா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நிலையில், இதில் அவருக்கு ஜோடியாக நடிகர் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  வந்தார். கதிர் - முல்லை ஜோடிக்கும் அதிக ரசிகர்கள் உள்ளது.tv serial actor kumaran shocked about chitra death

இந்நிலையில், சித்ராவின் திடீர் மரணத்தால் சக நடிகர் குமரன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இது தொடர்பாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்ராவின் புகைப்படத்துடன், 'உனது தைரியத்திற்காக நீ அறியப்பட்டாய். பல பெண்களுக்கு நீ முன்னுதாரணமாகவும் திகழ்ந்தாய். நீ திரும்ப போராடியிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் இது ஒரு போதும் பதிலாகாது' என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்