ஒரு பிரியாணி வெறும் 10 பைசா தானா...! அவங்க சொன்னதுல மறைஞ்சு இருந்த ட்விஸ்ட்...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கிய கடையின் முன்பு பொதுமக்கள் குவிந்த சம்பவம் அப்பகுதியில் சிறுது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிரியாணி வெறும் 10 பைசா தானா...! அவங்க சொன்னதுல மறைஞ்சு இருந்த ட்விஸ்ட்...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!

2020ஆம் ஆண்டின் உலக பிரியாணி தினத்தை கொண்டாடும் வகையில் திருச்சியை சேர்ந்த பிரியாணி கடை ஒன்று 10 பைசாவிற்கு பிரியாணி விற்கப்படும் என்று அறிவித்துள்ளார். மக்களுக்கு பிரியமான பிரியாணி அதுவும் 10 பைசாவிற்கு கிடைக்கும் என்று தெரிந்தால் யாராவது வாங்க மறுப்பார்களா...! ஏராளமான பொதுமக்கள் பிரியாணி கடை முன்பு குவிந்துள்ளனர்.

ஆனால் கடையின் உரிமையாளர் 10 பைசாவுடன் வரும் 100 பேருக்கு மட்டும் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததில் ஆசையாக பிரியாணி சாப்பிட வந்த பலர் ஏமாற்றதோடு திரும்பி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மற்ற செய்திகள்