'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு!'.. ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாத, டின்பிஎல் வீரரின் அதிரடி முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டி.என்.பி.எல் தொடரில் அதிரடி காட்டிய தமிழக வீரர் பெரியசாமி. இவர் ஐபிஎல் தொடரில் ஏலம் போவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் ஏலம் போகவில்லை.

'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு!'.. ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாத, டின்பிஎல் வீரரின் அதிரடி முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்!

ஏலம் போகவில்லை எனினும் இவர் சோர்ந்து போகவில்லை என்பதற்குச் சான்றாய், இவர் தொடர்ந்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருவது பலருக்கும் ஆச்சரியமாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

தன்னுடைய புதுமையான பவுலிங் முறை, நேர்த்தியான பந்துவீச்சு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாண்ட பெரியசாமி தனது வலக்கண்ணில் பார்வைக்குறைபாடு இருப்பினும் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும், தொடர் விருதையும் தட்டிச் சென்றார்.

சேலம் மாவட்டம் தேசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, தற்போது நடந்த ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத போதிலும், தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, விசைத்தறி தொழிலிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.