திருமணமாகி 4 மாதம்! ..'தாலி, பூ, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு'.. நீட் தேர்வறைக்குள் நுழைந்த புதுமணப்பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

திருமணமாகி 4 மாதம்! ..'தாலி, பூ, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு'.. நீட் தேர்வறைக்குள் நுழைந்த புதுமணப்பெண்!

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடந்த இந்த தேர்வுக்காக, காலை 11 மணி முதல் தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவ, மாணவியர் கடும் சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டதுடன்,  தேர்வு மைய வளாகத்தில் தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டன. இதேபோல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த பெண்மணி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி வீட்டாரிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்குள் சென்றார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுத வந்த அவர்,  தாலி, பூ மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.

மற்ற செய்திகள்