'ஒருபக்கமாக கவிழ்ந்த.. தனியார் கல்லூரி பேருந்து!'.. 'திடீர் தீப்பற்றி எரிந்த சம்பவம்'.. நாமக்கலில் பரபரப்பு!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கலில் தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஒருபக்கமாக கவிழ்ந்த.. தனியார் கல்லூரி பேருந்து!'.. 'திடீர் தீப்பற்றி எரிந்த சம்பவம்'.. நாமக்கலில் பரபரப்பு!'

நாமக்கலில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனமான கே.எஸ்.ஆர் கல்லூரியில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்திருந்ததோடு, அப்பேருந்து தீப்பற்றி எரிந்தபோது அருகில் இருந்த கல்லூரி பேருந்து உடனடியாக அங்கிருந்து நகர்த்தப்பட்டது. வானளாவும் கரும்புகைமூட்டம் அக்கல்லூரி பேருந்திலிருந்து வெளியானது. எனினும் இந்த தீவிபத்து உண்டானதற்கான துலக்கமான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 

COLLEGE, BUS