தமிழகத்தில் ஒரே நாளில் '33 பேருக்கு' ஓமிக்ரான்...! 'புதிய' கட்டுப்பாடுகள் என்ன...? - தலைமைச்செயலாளர் ஆலோசனை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் '33 பேருக்கு' ஓமிக்ரான்...! 'புதிய' கட்டுப்பாடுகள் என்ன...? - தலைமைச்செயலாளர் ஆலோசனை...!

தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஓமிக்ரான் தொற்று பரவத்தொடங்கியதுமே ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா உறுதியானால் ஓமிக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இருப்பினும் இந்தியாவில் கடந்த 2-ந் தேதி இந்த வைரஸ் நுழைந்தது.  தற்போது இந்த  எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு இன்று பகல் 12 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.  கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி மராட்டிய மாநிலம் - 65, டெல்லி - 64, தெலங்கானா - 24,  ராஜஸ்தான் - 21, கர்நாடகா - 19, கேரளா - 15, குஜராத் - 14, ஜம்மு-காஷ்மீர் - 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 2, சண்டிகர் - 1, லடாக் - 1, மேற்கு வங்காளம் - 1, உத்தரகாண்ட் - 1, தமிழ்நாடு - 34 ஆகியோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OMICRON, OMICRON, 33 PEOPLE, சுகாதாரத்துறை, ஓமிக்ரான், TN HEALTH

மற்ற செய்திகள்