"தமிழ்நாட்டில் இனி 'தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்' இருக்கும்!".. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து பயன்படுத்துப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவித்துள்ளது.

"தமிழ்நாட்டில் இனி 'தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்' இருக்கும்!".. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களால் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-

"தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும், உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்".

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, "தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல்" என்ற அறிவிப்பாணையின் மூலம், சுமார் 1018 ஊர்ப்பெயர்களின் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்