'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்வரை சத்துணவு பெறும் மாணவர்களுக்கு  மாதத்திற்கு 10 முட்டைகள் வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு!

Covid19 பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி, 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

TN Govt announce 10 eggs for noon meals students per month

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்குவதற்கு தமிழக அரசு. உத்தரவிட்டிருக்கிறது ஏற்கனவே வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன் முட்டையையும் சேர்த்து வழங்குவதற்கு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்