திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.. கள்ளக்குறிச்சியில் ஒட்டு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்திய அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.. கள்ளக்குறிச்சியில் ஒட்டு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்திய அதிகாரிகள்..!

எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியை கைப்பற்றிய திமுக - செந்தில் பாலாஜியின் ஆப்பரேஷன் சக்ஸஸ்..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தபால் ஓட்டுகள்

வாக்கு எண்ணிக்கையின் முதற் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.

கள்ளக்குறிச்சி

தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி 11 வது வார்டில் வாக்கு எண்ணிக்கையின் போது  திமுக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது.

வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க 21 வார்டுகளிலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு வார்டுகளிலும், பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக வாக்கு சேகரிப்பின் போதே திமுக வேட்பாளர் சர்புதீன் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் பாபு ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2 வேட்பாளருக்கும் ஒரே எண்ணிக்கையில் விழுந்த ஓட்டுகள்.. குலுக்கல் முறையில் திமுக வேட்பாளருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் வெற்றி..!

TAMILNADU ELECTION RESULTS, VOTE COUNTING STOP, DMK AND ADMK MEMBERS FIGHT, KALLAKURICHI, திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம், கள்ளக்குறிச்சி

மற்ற செய்திகள்