ஒரே நாள்ல இவ்வளவு உயர்ந்திடுச்சா...? 'ஆயிரத்தை தாண்டி போய்ட்ருக்கு...' 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்...' - அதிர்ச்சி ரிப்போர்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (21-03-2021) ஒரே நாளில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாள்ல இவ்வளவு உயர்ந்திடுச்சா...? 'ஆயிரத்தை தாண்டி போய்ட்ருக்கு...' 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்...' - அதிர்ச்சி ரிப்போர்ட்...!

கொரோனா பாதிப்படைந்த 1,289 பேரில் 1,280 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,66,982 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,903 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,41,623 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 668 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,46,480 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 5 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,599 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 8,66,982 பேரில் ஆண்கள் 4,32,777 பேர் எனவும், பெண்கள் 2,83,781 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 35 ஆக உள்ளனர்.

தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்

மற்ற செய்திகள்