'சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு...' 'தமிழகத்தின்' இன்றைய (08-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (08-03-2021) ஒரே நாளில் 556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு...' 'தமிழகத்தின்' இன்றைய (08-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,55,677 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,018 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் 2,37,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 532 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,39,138 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,521 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்