'102 பேர் பலி...' சென்னை உட்பட தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (28-08-2020) ஒரே நாளில் 5996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'102 பேர் பலி...' சென்னை உட்பட தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

கொரோனா பாதிப்படைந்த 5996 பேரில் 5971 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 25 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,09,238 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,506 ஆக உள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 5996 பேரில் ஆண்கள் 3543 மற்றும் பெண்கள் 2453 ஆகும்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,869 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 496 பேருக்கும், திருவள்ளூரில் 298 பேருக்கும்,செங்கல்பட்டில் 296 பேருக்கும் கடலூரில் 256 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,752 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,49,682 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 69 பேர், தனியார் மருத்துவமனையில் 33 பேர் என மொத்தம் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,050 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 44,20,697 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்