'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (25-08-2020) ஒரே நாளில் 5951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

கொரோனா பாதிப்படைந்த 5951 பேரில் 5937 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 14 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,128 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,27,949 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்பத்தூரில் 322 பேருக்கும், கூடலூரில் 370 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 107 பேர், தனியார் மருத்துவமனையில் 42 பேர் என மொத்தம் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6721 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 41,99,492 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்