'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (16-08-2020) ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

கொரோனா பாதிப்படைந்த 5,950 பேரில் 5,918 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 32பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 54,019 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,16,650 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 488 பேருக்கும், செங்கல்பட்டில் 436 பேருக்கும், கோயம்பத்தூரில் 395 பேருக்கும் மற்றும் காஞ்சிபுரத்தில் 307 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6,019 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 86 பேர், தனியார் மருத்துவமனையில் 39 பேர் என மொத்தம் 125 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 3,38,055 பேரில் ஆண்கள் 2,03,838 பேர் எனவும், பெண்கள் 1,34,188 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 29 ஆக உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 35,81,939 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்