"முதல் முறையா ஒரே நாளில் 2000-ஐ தாண்டிய பாதிப்பு!".. தமிழகத்தில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா! இன்று மட்டும் 48 பேர் உயிரிழப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (ஜூன் 17, 2020) ஒரே நாளில் 2 ஆயிரத்து174 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

"முதல் முறையா ஒரே நாளில் 2000-ஐ தாண்டிய பாதிப்பு!".. தமிழகத்தில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா! இன்று மட்டும் 48 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 50 ஆயிரத்து 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தமாக 35,556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்