'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?!!'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!!!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?!!'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!!!'...

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்துள்ளார். அப்போது புதுச்சேரியில் மழை காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள முதலமைச்சர், "தமிழகத்தில் தற்போதைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு நிலைமையை பொறுத்து அரசு முடிவெடுக்கும். மேலும் வரும் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கொரோனா ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்