வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வயல் வெளியில் இறங்கி விவசாயிகளுக்கு முகக்கவசம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

திருவாரூரில் ரூ.22.06 கோடியில், 23 புதிய திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 

அதைத் தொடர்து சிறு, குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ள நீடாமங்கலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு முகக்கவசங்களை தன் கைகளால் வழங்கினார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்