'பக்தர்களின் நலனுக்காக...' 'இந்து கோயில்களில்...' - தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கட்டப்பட்ட திருமண மண்டபங்களையும், அன்னதான கூடங்களையும் காணொளிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார். 

'பக்தர்களின் நலனுக்காக...' 'இந்து கோயில்களில்...' - தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள்...!

தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை, இந்து சமய கோவில்களை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் பணியையும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், சிறப்பாக செய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை திருவான்மியூர் பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவிலான அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான பகுதியில் 20 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் நவீன திருமண மண்டபம் கட்டப்படும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் திருமண மண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சென்னை மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியில் இருக்கும் அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயிலில் 2,464 சதுர அடி பரப்பளவில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டப்பட்டது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ஆற்காடுகுப்பம், அருள்மிகு சோளீஸ்வரசுவாமி திருக்கோயிலில் 2,110 சதுர அடி பரப்பளவில், 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட  அன்னதானக் கூடத்தையும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் 2,016 சதுர அடி பரப்பளவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தையும் தமிழக முதல்வர் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

இன்று மட்டும் சுமார் 21 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன திருமண மண்டபம் மற்றும் 3 அன்னதானக் கூடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்