ஃபிரண்ட்ஸ் உடன் கேக் வெட்டி‘பிறந்த நாள்’ கொண்டாட்டம்.. கடைசியில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிறந்தநாள் விழா கொண்டாடிய இளைஞருக்கு நண்பர்களால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிரண்ட்ஸ் உடன் கேக் வெட்டி‘பிறந்த நாள்’ கொண்டாட்டம்.. கடைசியில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்..!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 21). இவர் அப்பகுதியில் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், தனது பிறந்த நாளில் நண்பர்களுக்கு மாரிமுத்து மது விருந்து வைத்துள்ளார்.

அலமாதி ஏரியில் மாரிமுத்து, அவரது நண்பர்களான ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதன் பின்னர், அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமமூர்த்தி, மாரிமுத்துவை கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது. இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார்.

Tiruvallur youth dies at his birthday party

இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார், மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மாரிமுத்துவின் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தாளிலேயே  இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

YOUTH, BIRTHDAY, TIRUVALLUR

மற்ற செய்திகள்