நண்பா...! நீயாடா இத பண்ண...? 'எந்த பொருளும் டேமேஜ் ஆகல...' 'கெடச்ச ஒரே ஒரு தடயம்...' - வசமா சிக்கிய நண்பன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு தன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த முக்கால் பவுன் நகை காணாமல் போயுள்ளது.

நண்பா...! நீயாடா இத பண்ண...? 'எந்த பொருளும் டேமேஜ் ஆகல...' 'கெடச்ச ஒரே ஒரு தடயம்...' - வசமா சிக்கிய நண்பன்...!

ஆனால் வீட்டின் கதவுகளோ ஜன்னல்களோ ஏதும் உடைக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பொன்ராஜ், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போது பொன்ராஜின் வீட்டில் புதிய செல்ஃபோன் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதை கைப்பற்றி, நடத்தப்பட்ட ஆய்வில் அது பொன்ராஜின் நண்பரான நாகராஜ் என்பவரின் செல்ஃபோன் என தெரியவந்தது.

இதன்காரணமாக பொன்ராஜின் நண்பரான நாகராஜை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தன் நண்பர் பொன்ராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வைக்கும் இடம் தெரியும் என்றும், பொன்ராஜ் குடும்பத்துடன் வெளியே கிளம்பியபோது வீட்டைத் திறந்து நகை திருடியதாகவும் கூறியுள்ளார்.

நண்பரின் வீட்டிலேயே கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்