"காப்பாத்துங்க".. காட்டில் இருந்து எரிந்த உடலுடன் ஓடி வந்த இளம்பெண்.. தமிழகத்தையே நடுங்க வைத்த பரபரப்பு சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளம் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி அலறி ஓடி வந்த நிலையில், அதன் பின்னர் தெரிய வந்த காரணம்  கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

"காப்பாத்துங்க".. காட்டில் இருந்து எரிந்த உடலுடன் ஓடி வந்த இளம்பெண்.. தமிழகத்தையே நடுங்க வைத்த பரபரப்பு சம்பவம்!!

Also Read | சென்னை : இருசக்கர வாகனத்துக்கு வாட்டர் வாஷ் செய்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலி !! பதைபதைப்பு சம்பவம்..

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் அருகே உள்ள பனைப்பாளையம் என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர், உடலில் தீயால் எரிந்த படி அலறியடித்து கொண்டு காப்பாற்றுங்கள் என்ற படி காட்டுப் பகுதியில் இருந்து ஓடி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனைக் கண்டதும் அங்கே இருந்த மக்கள் பீதியில் உறைந்து போக உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண் உடம்பில் தீ வைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த இளம் பெண் ராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபரும், இளம்பெண்ணும் ஒரே தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் சம்பவத்தன்று அவர்கள் இருவரும் காட்டுப்பகுதிக்கும் தனியாக சென்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக இதனால் லோகேஷ் கடும் ஆத்திரம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. முதலில் இளம் பெண்ணை கல் கொண்டு தாக்கிய லோகேஷ் பின்னர் அவரது உடலில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி தான் தனது உடலில் தீ பற்ற வைக்கப்பட்டதும் வலியால் அலறித் துடித்த இளம்பெண், அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். இதன் பின்னர் அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வாலிபர் லோகேஷை போலீசார் தேடி வந்த நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மயக்கம் வருவதாகவும் கூறி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதனையடுத்து பல்லடம் டிஎஸ்பி சௌமியா மற்றும் போலீசார் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுபக்கம், தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காதலன் லோகேஷிடமும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் ஒருவர் காதலனால் தீ வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விஷயம் அப்பகுதியில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | மீண்டும் அதிர்ச்சி.. காரில் சிக்கி 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட உணவு டெலிவரி ஊழியர்.. பதைபதைப்பு சம்பவம்!!

TIRUPPUR, WOMAN, FIRE, YOUTH

மற்ற செய்திகள்