'காதல் கணவரோடு விருந்து'... 'மஞ்ச கயிறோட ஈரம் கூட காயல'... 'இப்படி பாக்குறதுக்கா உன்ன காதலிச்சேன்'... கதறிய புதுமாப்பிள்ளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆயிரம் கனவுகளோடு திருமணம் செய்யும் இளம் தம்பதியர், அதனை நிஜமாக்குவதற்குள் அனைத்தும் தகர்ந்து போவது கொடுமையின் உச்சம். அதுபோன்ற ஒரு சோக சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

'காதல் கணவரோடு விருந்து'... 'மஞ்ச கயிறோட ஈரம் கூட காயல'... 'இப்படி பாக்குறதுக்கா உன்ன காதலிச்சேன்'... கதறிய புதுமாப்பிள்ளை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகள் தேவி. 20 வயது நிரம்பிய தேவியும், உடுமலை அருகே உள்ள அமராவதியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் உறவினர்கள் என்பதால், இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வர அவர்களுக்கும் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

இதையடுத்து கடந்த 8-ந்தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கணியூர் நாமகிரி அம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு செல்ல வேண்டிய விருந்து சம்பிரதாயங்கள் ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் தேவி தனது காதல் கணவருடன் தாயார் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.

மதியம் கணவன்-மனைவி இருவரும் விருந்து சாப்பிட்ட நிலையில், வீட்டுக்கு வெளியே புதுமாப்பிள்ளை செல்வராஜ் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறைக்குச் சென்ற தேவி கதவைப் பூட்டிக் கொண்டார். வெகுநேரமாகியும் தேவி கதவைத் திறக்காத நிலையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவைத் திறக்குமாறு சத்தம் போட்டார்கள். ஆனாலும் அவர் கதவைத் திறக்கவில்லை.

இதையடுத்து கதவை உடைத்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. விருந்துக்கு வந்த தேவி, வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டு சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே தேவியை மீட்டு தனியார் ஆம்புலன்சில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதை அறிந்த கணவர் செல்வராஜ், ''இதற்குத் தான் உயிருக்கு உயிரா காதலிச்சியா, ஏன் என்ன விட்டுட்டு போன'' எனக் காதல் மனைவியின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். செல்வராஜ் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தாராபுரம் சப்-கலெக்டரும் விசாரணை நடத்த உள்ளார். விருந்துக்கு வந்த இடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்