'16 வயது' சிறுமியை 'கர்ப்பமாக்கிய' 3 பேர்... 'குளிர்பானத்தில்' மயக்கமருந்து கலந்து கொடுத்து... 4 மாதங்களாக... 'காதலித்தவனே' உடந்தையாக இருந்த 'கொடுமை'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவாரூரில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'16 வயது' சிறுமியை 'கர்ப்பமாக்கிய' 3 பேர்... 'குளிர்பானத்தில்' மயக்கமருந்து கலந்து கொடுத்து... 4 மாதங்களாக... 'காதலித்தவனே' உடந்தையாக இருந்த 'கொடுமை'...

திருவாரூர் அருகே உள்ள குன்னலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்தனர். இவருக்கும் எதிர்வீட்டில் வசித்து வந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து, அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்தனர். கார்த்திக் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் இதற்கு சம்மதித்த சிறுமி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

கார்த்திக் அந்த சிறுமிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த அவரது நண்பர்களான ஜான்சன் மற்றும் விஸ்வராஜ் ஆகியோரும் இந்த கொடுமையை அந்த சிறுமிக்கு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 4 மாதங்களாக அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, அவரை பெற்றோர் திருவாரூர அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சித் தகவலை கூறினர். இதனால் சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சிறுமியிடம் கேட்டபோது, அவர் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி  கார்த்திக், ஜான்சன், விஸ்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

THIRUVARUR, GIRL, MOLASTED, 3 PERSON