போர் அடித்ததால் விலகிய காதலர்கள்.. நடுத்தெருவுக்கு வந்த காதலிகள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திசையன்விளை : காதலித்து திருமணம் செய்வதாக கூறி விட்டு, பின் ஏமாற்றி விட்டுச் சென்ற இளைஞர்களால், பெண்கள் நொந்து போயுள்ளனர்.

போர் அடித்ததால் விலகிய காதலர்கள்.. நடுத்தெருவுக்கு வந்த காதலிகள்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை அடுத்த முருகேசபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கே வசித்து வருபவர் சசிகலா. இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

ஆனால், அவரது கணவர் இறந்து விட்டார். சசிகலாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளது. தொடர்ந்து, திசையன்விளை மெயின் ரோடு அருகே அமைந்துள்ள தனியார் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

காதல்

அப்போது, சசிகலாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அது மட்டுமில்லாமல், சசிகலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகவும் அந்த இளைஞர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சசிகலாவும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

thirunelveli youths cheated on girls police searching

மிரட்டிய இளைஞர்

இதன் காரணமாக, சசிகலா இரண்டு முறை கர்ப்பம் ஆகியுள்ளார். ஆனால், இரண்டு முறையும் முத்துவின் பேச்சைக் கேட்டு, அபார்ஷன் செய்துள்ளார். இதனையடுத்து, தற்போது மூன்றாவது முறையாக அந்த இளைஞரால் கர்ப்பம் ஆகியுள்ளார் சசிகலா. ஆனால், மீண்டும் கருவைக் கலைக்க வேண்டும் என முத்து கூறியுள்ளார். அத்துடன், கருவைக் கலைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் முத்து மிரட்டியுள்ளார்.

கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பாக்காம.. முடிய புடிச்சு இழுத்து அடிச்சுருக்காங்க.. வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை

 

போலீஸ் நிலையத்தில் புகார்

இது தொடர்பாக, சசிகலா மற்றும் முத்து ஆகியோர் பேசும் ஆடியோ ஒன்றும், வெளியாகியுள்ளது. மேலும், திருமணம் செய்யவும் இளைஞர் மறுத்ததாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து, தன்னை ஏமாற்றி வந்த இளைஞரின் முடிவால், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் சசிகலா. மன வேதனையில் இருந்து வந்த சசிகலா, திசையன்விளை போலீஸ் நிலையத்தில், இளைஞர் தன்னை ஏமாற்றியதாக புகாரளித்துள்ளார். தொடர்ந்து, இளைஞரை அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அவரும் சசிகலாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.

போராட்டம்

thirunelveli youths cheated on girls police searching

ஆனால், அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது பற்றி, இளைஞர் வாயைக் கூட திறக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்ய இளைஞர் மறுப்பு தெரிவித்து வந்ததால், பொறுமை இழந்த சசிகலா, இளைஞரின் வீட்டிற்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், சசிகலாவிடம் இருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகைகளையும் இளைஞர் ஏமாற்றி வாங்கி செலவழித்ததாக கூறப்படுகிறது.

ஏமாந்த மற்றொரு பெண்

சசிகலாவுக்கு நடந்ததைப் போலவே, திசையன்விளை பகுதியில், இன்னொரு பெண்ணும் காதலனால் ஏமாற்றப்பட்டுள்ளார். நர்சிங் படித்துள்ள இளம் பெண் ஒருவர், அஜித் குமார் என்ற இளைஞரை, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

thirunelveli youths cheated on girls police searching

வேறொரு பெண்ணுடன் திருமணம்

மேலும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிய அஜித் குமார், அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த பெண் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பெண்ணை ஏமாற்றிய அஜித் குமார், ஆந்திர மாநிலம் சென்று, அங்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கையில் பையுடன் வந்த பெண்.. பைக்குள்ள இருந்தத பார்த்து வெலவெலத்து போன போலீஸ்!.. பரபரப்பு சம்பவம்!!

புகார்

இதனால், அதிர்ச்சி அடைந்த இளம் பெண், அஜித் குமார் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தன்னிடம் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளையும் ஏமாற்றி வாங்கியுள்ளதாக தன்னுடைய புகாரில் இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.

thirunelveli youths cheated on girls police searching

காதல் என்ற பெயரில், இளைஞர்கள் ஏமாற்றிச் சென்றதால், மிகவும் பரிதாபமான நிலையில் இளம் பெண்கள் இருப்பது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

THIRUNELVELI, YOUTHS, THIRUNELVELI YOUTHS CHEAT, காதலித்து திருமணம், திருநெல்வேலி, காதல்

மற்ற செய்திகள்