'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த காலங்களில் அரசு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அபராத கட்டணங்களை உயர்தினாலும் சில வாகன ஓட்டிகள் இன்றளவும் ஹெல்மட் அணியாமல் சாலைகளில் பயணிக்கின்றனர்.

'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...!

அதன்காரணமாக மீண்டும் ஒரு விழிப்புணர்வு திட்டத்தை தீட்டியுள்ளது தமிழக அரசு. அதன்படி பைக் பயன்பாட்டிற்கு முக்கியமாகதாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில் 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தை காட்சிப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பைக்கிற்கு மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல், டீசல் இல்லை' எனவும் பதாகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவு சென்னைக்கும் மட்டும் பொருந்தும் என தகவல்களும் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்