Darbar USA

"அடடே! தம்பி நீங்களும் 'பாத்ரூம்ல' வழுக்கி விழுந்துட்டீங்களா..." "வாங்க வாங்க' மாவுக்கட்டு' போடலாம்..." போலீசாரை 'தாக்கியவருக்கு நேர்ந்த கதி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரத்தில் போலீசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து வழக்கம் போல் கழிவறையில் வழுக்கி விழுந்து கை மற்றும் கால்களை முறித்துக் கொண்டார்.

"அடடே! தம்பி நீங்களும் 'பாத்ரூம்ல' வழுக்கி விழுந்துட்டீங்களா..." "வாங்க வாங்க' மாவுக்கட்டு' போடலாம்..." போலீசாரை 'தாக்கியவருக்கு நேர்ந்த கதி...

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் பேக்கரியில் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது  போதையில் இருந்த சிலர் கொலைவெறித் தாக்கதல் நடத்தினர்.  இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளர்  தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தாக்குதல் நடத்திய நபர்கள் உச்சிபுளியை அடுத்த நாகாச்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில் நாகாச்சியைச் சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, தான் மதுபோதையில் அவ்வாறு தாக்கதலில் ஈடுபட்டதாகவும், தம்மைப் போல் வேறு யாரும் குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், போலீசாரிடம் மன்னிப்பு கோருவதாகவும் கணேசன் பேசிய வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணேசன் வழக்கம் போல் கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களை முறித்துக் கொண்டார்.

அவருக்கு இரண்டு கால்கள் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கணேசனுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. போலீசாரை தாக்கிய விவகாரத்தில் மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SLIPPED BATHROOM, POLICE, FRACTURED