'பாத்ரூம்'ல என்னமோ மின்னுது...! பதறிய மனைவி... - பக்கத்துக்கு வீட்டு வாலிபர் செய்த 'பயங்கர' செயல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சாவூர் தெற்குவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில், இவரது வீட்டின் குளியலறையின் மேல் ஏதோ வெளிச்சம் மின்னுவதுப் போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெங்கடேசின் மனைவி, தனது கணவரிடம் கூறியுள்ளார்.

'பாத்ரூம்'ல என்னமோ மின்னுது...! பதறிய மனைவி... - பக்கத்துக்கு வீட்டு வாலிபர் செய்த 'பயங்கர' செயல்...!

உடனடியாக பாத்ரூம் சென்று பார்த்த போது வெப் கேமரா சார்ஜ் குறையாமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர்அகமது(35) என்பரை கைது செய்துள்ளனர்.

இதுபற்றி வெங்கடேசன் கூறும்போது, 'எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது, திருமணம் ஆகி ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரின் தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியராக பணிபுரிகிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் எனது மகளும், மனைவியும் குளிப்பதை, மாடியில் இருந்து பார்த்தார். இது குறித்து அவரது தந்தையிடம் கூறினேன், அப்போது தன் மகன் பக்கம் நின்று எங்களிடம் சண்டைக்கு வந்தார்.

மேலும், எனது வீட்டின் பின்புறம் தான் குளியலறை உள்ளது. அதையொட்டி இன்னொருவருக்கு சொந்துமான காலி வீடு உள்ளது. அந்த வீட்டின்  உரிமையாளர், வீட்டை பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டை சுற்றிக் காட்டுவதற்காக, வீட்டின் சாவியை நசீர் அகமதுவிடம் கொடுத்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் பாத்ரூம் கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி மனைவி, மகள் குளிப்பதை பார்த்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்