WATCH VIDEO : 'கல்யாண மண்டபத்தில்' கைவரிசை காட்டிய சிறுவன்'.... சிக்கிய 'சிசிடிவி' காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமண மண்டபத்தில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை சிறுவன் திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH VIDEO : 'கல்யாண மண்டபத்தில்' கைவரிசை காட்டிய சிறுவன்'.... சிக்கிய 'சிசிடிவி' காட்சிகள்!

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தன்னுடைய மகளுக்கு கடந்த 18ஆம் தேதி காளவாசல் பகுதியில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் சுபநிகழ்ச்சி வைத்திருந்தார். இதனிடையே திருமண மண்டபத்தில் இருந்த ஒரு லட்ச ரூபாய் காணாமல் போக அது ராஜ்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அப்போது பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. அதனை தொடர்ந்து சிறுவனை பிடித்த காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ROBBERY, CCTV, MADURAI, WEDDING HALL