Tamilnadu sunday Lockdown : தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் எதற்கு எல்லாம் தடை?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த  ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu sunday Lockdown : தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் எதற்கு எல்லாம் தடை?

முதல்வரின் உத்தரவின்  படி, வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

முழு இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த வாடகை வாகனங்களை அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

MKSTALIN, CORONAVIRUS, LOCKDOWN, SUNDAY LOCKDOWN, ஞாயிறு ஊரடங்கு, முழு ஊரடங்கு, லாக்டவுன்

மற்ற செய்திகள்