தமிழகத்தில்... பள்ளிகள் திறப்பு குறித்து... 'முக்கிய' அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக 'அரசு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

தமிழகத்தில்... பள்ளிகள் திறப்பு குறித்து... 'முக்கிய' அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக 'அரசு'...

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, பல கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, தமிழகத்தில் 10,11, மற்றும் 12  ஆம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அக்டோபர் 1 - ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே வேளையில், மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளும் பொருட்டு பள்ளிகளுக்கு செல்லலாம். என்றாலும், கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிக்கூடங்களில் செல்ல அனுமதி கிடையாது' எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு நெறிமுறைகளுடன் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்