"லைன்ல வந்ததுக்கு நன்றி அண்ணா".. முதல்வரை பாராட்டி கடிதம் எழுதிய எம்ஜிஆர் ரசிகர்.. போனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த CM ஸ்டாலின்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாராட்டி கடிதம் எழுதிய எம்ஜிஆர் ரசிகருக்கு போன் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

"லைன்ல வந்ததுக்கு நன்றி அண்ணா".. முதல்வரை பாராட்டி கடிதம் எழுதிய எம்ஜிஆர் ரசிகர்.. போனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த CM ஸ்டாலின்..!

Also Read | "என் Friend எந்திரிக்கவே இல்ல.. ரூம்ல பாம்பு இருக்கு..சீக்கிரம் வாங்க"..போலீசுக்கு போன் செஞ்ச நபர்.. உண்மையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!

கடந்த ஜூன் 29-ம் தேதி வேலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் சென்றிருந்தார். அதன்பின்னர் சென்னை திரும்பிய ஸ்டாலினுக்கு வேலூர் மாநகர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பன்னிர் செல்வம் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது.

அதில்,"மாண்புமிகு முதல்வர் அவர்களே, நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறினீர்கள். அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான  இந்த பன்னிர்செல்வத்தின் வாழ்த்துகள். மேலும் நீங்கள் வேலூர் வருகை தந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. நீங்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே எங்களுக்கு  தெரியவில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து சென்றது எங்களை நெகிழச் செய்தது. இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில் தான் நடந்திருக்கும் என்பதை அறிகிறேன். மேலும் நீங்கள் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்ப்பட்டு விட்டது. வாழ்த்துகள் ஐயா” எனக் குறிப்பிட்டிருந்தார் பன்னீர் செல்வம்.

Tamilnadu cm Mk Stalin Thank Vellore auto driver

மேலும், மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இருக்கும் புகைப்படத்தையும் எம்ஜிஆருடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் பன்னீர் செல்வம் கடிதத்துடன் அனுப்பியிருந்தார்.

நன்றி

இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்துக்கு போன் மூலமாக நன்றி தெரிவித்திருக்கிறார் முக.ஸ்டாலின். போனில் முதல்வர் பேசுகையில்,"உங்களுடைய கடிதம் கிடைத்தது. என்னுடைய செயல்பாடுகளை வாழ்த்தி எழுதியிருந்தீர்கள். நன்றி" என தெரிவிக்க அதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம்,"நீங்களே எனக்கு போன் செய்து பேசியது மிகவும் மகிழ்ச்சி அண்ணா" என்றார்.

மேலும், கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்த தனக்கு முதல்வரே போனில் நன்றி தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.

Also Read | தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. ஹாஸ்பிடல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

TAMIL NADU CM, CM MK STALIN, CHEIF MINISTER MK STALIN, VELLORE AUTO DRIVER

மற்ற செய்திகள்