'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று முதல் வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...

நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தமிழகத்தில் 100 சதவிகித பணியாளர்களுடன் வங்கிகள் இயங்கும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி செயல்பட வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவேளை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்