ஓமிக்ரோன் பாதித்த நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஓமிக்ரோன் பாதித்த நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர்..!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வகையான வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதன்முதலாக இரண்டு பேருக்கு ஓமிக்ரோன் கொரோன வைரஸ் கண்டறியப்பட்டது.

Tamil Nadu registers 2nd omicron variant case, Said Radhakrishnan

இதனை அடுத்து நேற்று நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஓமிக்ரோன் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu registers 2nd omicron variant case, Said Radhakrishnan

இந்த நிலையில் காங்கோவில் இருந்து ஆரணி வந்த பெண் ஒருவருக்கும் ஓமிக்ரோன் கொரோனா அறிகுறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (16.12.2021) தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு ஓமிக்ரோனுக்கு முந்தைய அறிகுறி இருந்தால் அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நைஜீரியருடன் தொடரில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்