'கல்லூரி முடித்ததும் உதவி தொகை'...'இளம் வழக்கறிஞர்களுக்கு அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

'கல்லூரி முடித்ததும் உதவி தொகை'...'இளம் வழக்கறிஞர்களுக்கு அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!

சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுக்காலம் பயிற்சி பெற வேண்டும்.

இந்த காலகட்டத்தில் கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் பெரும் சவால்களைச் சந்திக்கிறார்கள். சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்குக் குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்குச் சென்று விடும் நிலையும் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பான திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியுள்ளது. இதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுக் காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மற்ற செய்திகள்